ஞாயிறு, 27 ஜூன், 2021

கவிதையே உனை எழுதவா?_ஜானி சின்னப்பன்


 கவிதையொன்றை  எழுதிட அமர்ந்தேன்..

கவிதையோ  என்னை எழுதிக் கடந்து போனது..

உன் வடிவில்..


கடற்கரையின்

மணற் பரப்பில்

புறாக் கூட்டமொன்று 

குபீரென எழுந்து

பறந்தாற்போல்

என்னுள் குதூகலம்..


காற்றின் வேகத்தில்

பலூன்களின் 

நாட்டியம்..


தொலைதூரக் கப்பல்களின்

அசைவில்

ஏதோவொரு நளினம்..


அடித்து ஓய்ந்து

மீளும் அலைகளின்

சேதியென்னவென

முழுதாய் என் கவனம்..


ஆங்காங்கே கூடிக்கும்பலாய்

மானுடர் சிரிக்கும்

களங்கமில்லாப் பெருநகைப்பு காதுக்கு இதமாய்..


பாவம் இங்காவது

நிம்மதி அவர்களை 

அரவணைக்கட்டும்

தற்காலிகமாகவாவது..



மீன் வறுவலும்..

சோளப் பொறிகளும்..

ஐஸ்க்ரீம் கப்புகளும்..

சிறுசிறு பொம்மைகளும்

பின் மாபெரும் மணற்பரப்பும்..


மீண்டுவிட முடியுமா 

முழுதாய் அந்த நீலக் கடல்வெளிப் பரப்பில் தொலைத்த என்

ஞாபகங்களின் 

நிழற்கயிறுகளின் 

கட்டுகளிலிருந்து..?!


_ஜானி சின்னப்பன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...