சனி, 26 ஜூன், 2021

*புதிரெனக்கு நீயடி*_ஜானி சின்னப்பன்

 




எட்டித் தாவிப் பல முயற்சி செய்து ஆலாய்ப் பறந்தேன்.. 

ஒருமுறையும் சிக்காமல் எட்டப் பறந்ததந்தப் புத்திமிகு  பட்டாம்பூச்சி.. 

ஒரு கணம் நின்றேன்.. 

யோசித்தேன்.. 

அடடே தொலைவில் பறந்து போயே போயிற்றெனத் தெளிந்து 

ஓர் ஓரமாக ஓய்வாக அமர்ந்தேன்.. 

தானே பறந்துவந்தென் கரந்தனில் அமர்ந்து புன்னகை வீசும் புதிரென்ன கூறேன் பட்டென பளபளக்கும் இறக்கையுடையோய்..

அழகுக் குச்சிக் கால்களால் கிச்சுக்கிச்சு மூட்டிடிடும் உணர்வினில் நெஞ்சம் நெகிழ நீ எம்பிப் பறந்தபின்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்... 

_ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...