வெள்ளி, 10 செப்டம்பர், 2021

ஆவேசம் கொண்டெழுந்தவனின் பாடலிது_திகில் கிராமம்..

 திகில் கிராமம்


(இது வீழ்த்தப்பட்டவர்கள் விழித்தெழுந்தெழுந்த வீரக்கதை)


வா வா வெக்காளி..

வா வா வெக்காளி..

உன் பின்னே நிற்கும் ஆதிகுடி..

புதைக்கப் பாத்துது மனுச குலம்..

விதையா முளைச்சி வெளிவருவோம்..

அழிக்கப் பார்த்த ஒரு பயலும்

பொழைக்க மாட்டான் இனிமேலும்..

சக்தியும் பலமும் கொடுத்தாயே

உலகை நசுக்க மறப்போமா?

உப்பைத் தின்னவன் எவன்னாலும்

தண்ணியைக் குடிக்க வெச்சிருவோம்..

தப்பை செஞ்சவன் எவன்னாலும்

தலையைக் காவு வாங்கிருவோம்..


அலட்சியம் பண்ணா ஆதிகுடி

பொழச்சி வந்து பொளப்போமடா..

ஆவேசமா வாரா வெக்காளி...

அவ முன்னே பூமி அடங்குமடா..

வா வா வெக்காளி..

துணையா வா வெக்காளி..


_ஜானி சின்னப்பன்.

அனைவருக்கும் இனிய விநாயகர் தின வாழ்த்துக்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாங்காக் பயங்கரம்

​பாங்காக் பயங்கரம்: கமாண்டர் ஜான் சின்னப்பனின் சாகசம் ​ஆண்டு 1944. இரண்டாம் உலகப் போர் ஆசியக் கண்டத்தில் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. போலந்த...