வெள்ளி, 10 செப்டம்பர், 2021

ஆவேசம் கொண்டெழுந்தவனின் பாடலிது_திகில் கிராமம்..

 திகில் கிராமம்


(இது வீழ்த்தப்பட்டவர்கள் விழித்தெழுந்தெழுந்த வீரக்கதை)


வா வா வெக்காளி..

வா வா வெக்காளி..

உன் பின்னே நிற்கும் ஆதிகுடி..

புதைக்கப் பாத்துது மனுச குலம்..

விதையா முளைச்சி வெளிவருவோம்..

அழிக்கப் பார்த்த ஒரு பயலும்

பொழைக்க மாட்டான் இனிமேலும்..

சக்தியும் பலமும் கொடுத்தாயே

உலகை நசுக்க மறப்போமா?

உப்பைத் தின்னவன் எவன்னாலும்

தண்ணியைக் குடிக்க வெச்சிருவோம்..

தப்பை செஞ்சவன் எவன்னாலும்

தலையைக் காவு வாங்கிருவோம்..


அலட்சியம் பண்ணா ஆதிகுடி

பொழச்சி வந்து பொளப்போமடா..

ஆவேசமா வாரா வெக்காளி...

அவ முன்னே பூமி அடங்குமடா..

வா வா வெக்காளி..

துணையா வா வெக்காளி..


_ஜானி சின்னப்பன்.

அனைவருக்கும் இனிய விநாயகர் தின வாழ்த்துக்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...