செவ்வாய், 29 ஏப்ரல், 2025

சிந்தனைக்கு: ஆவணப்படுத்தலின் அவசியங்கள்

 வணக்கம் வாசகப் பெருமக்களே...

யாரேனும் பொன்னி மாதிரி முன்னர் இயங்கி வந்து தற்சமயம் நடப்பில் இல்லாத பதிப்பகங்களில் வெளியான காமிக்ஸ்கள் என்னிடம் இருக்கிறது.

 இது ஸ்கேன் ஆகியிருக்கான்னு பாருங்க என தனிச்செய்தியிலாவது கேட்பார்களா என ஆவலோடு காத்திருக்கிறேன்.. நம்ம நண்பர்கள் கொஞ்சம் வீட்டிலேயும் தேடிப்பாருங்களேன்... ஓல்ட் ஈஸ் கோல்ட். மக்கி மண் கரையான் அரிக்கும் முன்பு நாம் நேசிக்கும் காமிக்ஸ் கதைப்புத்தகங்கள் வரையிலாவது பாதுகாப்பது அவசியம்.. 

ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வோம்..

மின்னல் மனிதன் தோன்றும்

"விண்வெளி பயங்கரவாதிகள்"

என்று வைத்துக் கொள்வோம்.

அது 1980 களில் வெளியாகி வெற்றி கண்ட லோக்கல் காமிக்ஸ். ஒரு ஐநூறு பிரதியாவது வெளியிடப்பட்டு விற்றிருக்கும்.. கொஞ்சம் காகித ஆலைக்கே "பழைய புக்ஸ் எடைக்கு வாங்கறது" நண்பர்கள் மூலமாக காயலான்கடை சென்று ஆலை அரைப்புக்கு போய் விட்டிருக்கும்... கொஞ்ச பிரதிகள் பரணையிலேயே கிடந்து கவனிப்பாரின்றி போயிருக்கும்.. பல பிரதிகள் அப்போதே சிறுவர்களால் படித்து கிழித்து தூக்கிப் போடப்பட்டிருக்கும்..

ஆனால் எங்கோ ஒரு வாடகைப் புத்தக நிலையத்தில் அரிதாக ஒரு சில பிரதிகள் மட்டும் நான்கைந்து கலவை புத்தகங்களில் ஒன்றாக பைண்ட் செய்யப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு பொது உபயோகத்தில் இருந்திருக்கும்..

கால வெள்ளம் இப்படியாக கொண்டு போய் விட்ட பிரதிகளோ திரும்ப வரவே வராது. ஆனால் மிஞ்சியுள்ள ஒரு சில பிரதிகள் மாத்திரமே நம்மவர்கள் காமிக்ஸ் ஆர்வம் கொண்டு சேமித்து வரும் வாசகர்களால் முறைப்படி பாதுகாக்கப்பட்டு எப்போதாவது ஏலத்திலும் வரும்.. 


நிற்க..

நாம் ஆவணப்படுத்துவதும் நாம் பாதுகாக்க நினைப்பதும் இந்த பதிப்பகம், இப்படி ஒரு  வெளியீட்டை, இந்த தலைப்பில் ஒரு காலத்தில் கொண்டு வந்துள்ளனர் என்பதும் அதனை டிஜிட்டல்மயமாக்கி புத்தகங்களை வாசிக்கும் நம் தலை முறை தாண்டி அகிலமெங்கிலும் கொண்டோ சேர்த்திடும் இணைய உலகுக்கு நன்கொடையாக அளிப்பதுவே.. 

இதற்கு மேலே குறிப்பிட்ட ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வோம்..

மின்னல் மனிதன் தோன்றும்

"விண்வெளி பயங்கரவாதிகள்" 

என்கிற தலைப்பில் வெளியான 500 புத்தகங்களில் இருந்து ஒரேயொரு புத்தகம் மாத்திரமே போதுமானது.. 

நாம் இப்படி இணையத்தில் வெளியிட்டு விட்டதாலேயே புத்தக மதிப்பு இறங்கி விடும் என்பது தேவையற்ற அச்சம்.. பல ஸ்கேன்லேஷன் புத்தகங்கள் நம்மிடையே பவனி வந்தாலும் அசல் புத்தகத்தின் மதிப்பு என்றும் குறைவதில்லை.. அசல் அசல்தான். அதன் கதையை அனைவரும் அறிந்து கொள்ள மக்கிப்போன புத்தகத்தை அத்தனை பேரும் வாங்கி புரட்டிப் பார்த்தாலே கொட்டிப் போய் விடும்.. ஆனால் ஒரு முறை டிஜிட்டல் வடிவத்துக்காக நம்மில் ஈடுபாடுகொண்ட ஒரு சிலர்  உழைத்து விட்டால்  அது காலாகாலத்துக்கும் நிலை நிற்கும்.. சிந்திக்கிறேன்..சிந்தியுங்கள்.. சிந்திப்போம்..


என்றும் அதே அன்புடன் ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மைக் மிக்னோலா- கட்டுரை

  உங்களை ஊக்குவிக்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள், நீங்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றும் கலைஞர்களும் இருக்கிறார்கள். பின்னர், ஒரு கலைஞராக நீங்...