வணக்கங்கள் அன்புள்ளங்களே.. இன்று காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. சித்திரக்கதைகளை வாசித்து திகட்டிப் போகும் சமயங்களில் இப்படியான கட்டுரைகளையும் வாசித்தால் காலப்பயணம் மேற்கொண்ட ஒரு அனுபவம் நமதாகிப் போகும்.. நமக்கு நாட் நாட் செவன் என்றால் மிகவும் பிடிக்கும்.. அவர் ஒரு பிரிட்டிஷ் தேச உளவாளி.. இந்த கட்டுரை மணிக்கொடி இதழ் -1938 ல் இடம்பெற்றுள்ள உள்நாட்டு ஒற்றர்களின் அவசியம் குறித்ததான கட்டுரை.. இந்த பதிவுக்கு உதவிய சுதா அம்மாவுக்கு நன்றிகள்.. அபூர்வமான இந்த கட்டுரையை சேகரித்து அளித்தவர் அவரே.. இனி கட்டுரை..
இது முன்னாள் பாரதப்பிரதமர் மாண்புமிகு ராஜகோபாலாச்சாரியாரின் காலத்தில் நிகழும் கட்டுரை என்பதை மனதில் வைத்து வாசியுங்கள்..காங்கிரஸ் அரசாட்சி நடைபெறும் மாகாணங்களில் 'சி. ஐ. டி.' என்ற ரகசி யப் போலீஸ் இலாகா இன்னும் எடுபடாமலிருக்கிறதென்பதைப் பற்றி காங்கிரஸ் காரர்களில் ஒரு பகுதியார் திகைப்பும் வருத்தமுமுற்றிருக்கிறார்கள். அவர் களில் சிலர் பிரதம மந்திரி ஸ்ரீமான் ராஜ கோபாலாச்சாரியாரிடம் இதைப் பற்றிக் கேட்டு அவருக் கியல்பான சாமர்த்தியத் துடன் அளிக்கப்பட்ட பதிலையும் பெற றிருக்கிறார்கள். கடந்த தேசியப் போரா ட்டங்களில் ஈடுபட்டுக் கஷ்டப்பட்ட அகே கருக்கு அவர்களைப் பலவித அடக்கு முறை உபாயங்களால் ஒடுக்கி நசுக்கி சுக்கி வந்த சர்க்காரைச் சேர்ந்த 'சி. ஐ. டி.' இலாகா உத்தியோகஸ்தர்கள் மீது வெறு ப்பு இருக்கக்கூடியது சகஜம். ஆனால் 'சி. ஐ. டி.' இலாகா அவசியமில்லை யென் றாவது,அதன் காரணமாக அதை எப் போதாவது எடுத்துவிடலா மென்றாவது யாராவது நினைத்தால் அது பகல் கன வாகும். காங்கிரஸ் அரசாட்சியில் போ லீஸ், 'சி ஐ- டி.' முதலான அம்சங்கள் முன்போல் இருக்காதென்று காங்கிரஸ் காரர்கள் எண்ணிக் கொண்டிருந்தால் அவர்கள் அரசியல் சாஸ்திரத்தை முற்றி லும் மறந்தவர்களாவார்கள்.
பண்டைக்கால இந்தியாவில் 'சி.ஐ.டி.' க்கு ஒத்த ஸ்தாபனம் ஏதாவது 'இருக்கிறதா என்பதைப் பற்றியும், அப்படி இருந்திருந்தால் அதற்கு அடிப்படை யான கொள்கைகள் என்ன என்பதைப் பற்றியும் ஆராய்ந்து பார்ப்பது பிரயோ ஜனமாயிருக்கும்.
புராதன காலத்தில் இந்த நாட்டில் 'சி.ஐ.டி.' இலாகாவிற்குரிய வேலை மிகவும் இன்றியமையாத தென்று கருதப்பட்டு, அதற்குக் கை தேர்ந்த நிபுணர்களே பொறுக்கப்பட்டார்கள். இவர்களுக்குக் தமிழ் நாட்டில் ஒற்றர்கள் என்று பெயர். எந்த காலத்திலும் ஒற்றர்களில்லாத அரசு கிடையாது. ஒற்றர்களின் வேலை மிகவும் கடினமானது; அதைத் திறம் படச் செய்வதற்கு நல்ல ஒழுக்கம், புத்தி யுக்தி,சாமர்த்தியம், பேச்சுவன்மை, நிதா னமான தன்மை யெல்லாம் அவசியம். இது காரணம் பற்றி ஒற்றர்கள் மிகவும் கண்ணியமாகவே அரசர்களால் நடத்தப் பட்டார்கள்.
ஒற்றர்கள் சம்பந்தமாக பண்டைத் தமிழ் நாட்டில் நிலவி வந்த கொள்கை களையும் கருத்துக்களையும் திருவள்ளுவரின் குறளில் தெளிவாகக் காணலாம். வள்ளுவருக்கு, சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டதாயும், பண்டைக்கால இந்திய அரசியல் தத்து வங்களின் களஞ்சியமாயு முள்ளது கௌதில்யரின் அர்த்த சாஸ்திரம். ஒற்றர்களின் அவசியத்தைப் பற்றியும், அவர்களுடைய வேலையைப் பற்றியும், அவர்களை வேலை ஏவுவதைப் பற்றியும் இந்நூல் விஸ்தாரமாகக் கூறுகிறது.
அரசர்களுக்கு ஒற்றர்கள் மிகவும் இன்றியமையாதவர்கள் என்பதை வள்ளுவர் ஒரு குறளில் காட்டியிருக்கும் தன்மை கவனிக்கத் தக்கது.
என்பது ஒற்றாடல் என்னும் குறள் அத்தியாயத்தின் முதல் பாட்டு, ஒரு அரச னுக்குத் தெளிந்த அரசியல் ஞானமும் ஒற்றும் இரண்டு கண்களாகும் என்பது
இந்தக் குறளின் பொருள். மனிதனுக்குக் கண் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஒற்றர்கள் அரசனுக்கு என்பது, காலத்தால் பாதிக்கப்படக் கூடாத ஒரு உண்மை. தன் நாடு, பிற நாடுகள், இவைகளில் நடைபெறும் எல்லா விஷயங்களையும் ஒரு அரசன் அறிந்துகொள்ளா விட்டால் அவனால் திறமையுடன் அரசாட்சி செய்ய முடியாது. அப்படி விஷ யங்களைத் தெரிந்துகொண்டால் மாத்திரம் போதாது. ஒற்றர்கள் மூலமாகக் கிடைத்த செய்திகளை நன்றாய் ஆராய்ந்து அவைகளை உபயோகித்துச் சிந்தனை செய்து, பின்னால் நேரக்கூடியவைகளை ஊகித்துக் காரியங்களைச் செய்வதற்குச் சான்றோர்கள் மூலம் தெளிந்த அரசியல் ஞானமும் அவசியம். மன்னனுக்கு ஒற்று கண் போலாகு மென்று வள்ளு வரே சொல்லியிருக்கும்போது, இந்தக் காலத்தில் 'சி. ஐ. டி.' அவசியமில்லையென்று யாராவது துணிந்து நினைக்க முடியுமா? முன்காலத்தில் அரசர்கள் செய்துவந்த வேலையையும், ஏற்றுவந்த பொறுப்பையும், இந்தக் காலத்தில் அர சாளும் மந்திரிகள் செய்துவருகிறார்கள் என்பது எளிதில் புலப்படும்.
அரசர்களுக்கு ஏன் ஒற்று அவசியமென்பது அடுத்த குறளால் விளங்கும். "எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் றொழில்."
எப்போதும் எல்லோருக்கும் என்ன நிகழ்ந்தாலும் அதை அறியவேண்டியது வேந்தனின் தொழில் என்கிறார் வள்ளுவர். மற்றத் தொழில்களை போல் அர சாட்சி நடத்துவதும் ஒரு தொழில் என்னும் கருத்து உயர்ந்தது. ஒற்றர்களை ஏவாத அரசர்களுக்கு, வெற்றியென்பது கிடையாது.
ஒற்றர்கள் மூலம் எவ்வெவர் சம்பந்தப் பட்டவரையில் உளவறிய வேண்டு மென் பதைப் பற்றிச் சொல்லும் பாட்டு விரிந்த கருத்தை யுடையது.
அரசர்கள் தங்களிடம் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுடைய பந்துக்கள், பகைவர்கள், இவர்களை ஆராய்ந்து அவர்களின் காரியாதிகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒற்றர்களை உபயோகப்படுத்த வேண்டும். வள்ளுவர் அகண்ட அரசியல் ஞானமும் உலக அறிவும் பெற்றவர் என்று சொல்லவும் வேண்டுமா? சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் ஒழுக்கத்தையும், அவர்கள் செய்யும் வேலையையும் ஒற்றர்கள் மூலம் தெரியவேண்டியது எல்வளவு அவசியம் அரசர்களுக்கு? நாம் இப்போது எவ்வளவோ முன்னேற்றமடைந்திருந்த போதிலும் இந்த அவசியம் தீர்ந்துவிட்டதென்று சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் அரசர்களுக்குத் தங்களுடைய சகோதரர்கள் தாயாதிகள் முதலிய பந்துக்களால் கெடுதி ஏற்படுவது சகஜமாயிருந்ததால் அவர்களைக் கண்காணிக்க வேண்டியது அவகியமாயிற்று. வேண்டாதார்கள் அல்லது விரோதிகள் கெடு தல்களை விளைவித்துக்கொண்டிருப்பார்களாதலால், அவர்களைப் பற்றிக் கட்டாயம் அரசர்களுக்குத் தெரியவேண்டும். இந்தக் காலத்திலும் இந்த அவசியமிருக்கிறது. எந்த அரசாட்சிக்கும் வேண்டாதவர்க ளிருப்பது உலக இயல்பு. அவர்கள் தங்களாலியன்றவரை அரசாட்சி செய்யும் மந்திரிகளைக் கவிழ்க்க முயற்சி செய்வதும் ஜனநாயக முறைக் கேற்றது தான். இதில் அவர்கள் சட்ட வரம்புக்குட்பட்டும் நியாய வரம்புக்குட்பட்டும் வேலை செய்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும் அவசிய மும் சர்க்காரைச் சேர்ந்தன.
ஒற்றர்களுக்கு யார் லாயக்கானவர்களென்பது கவனிக்கத் தக்க விஷயம். பல தினுசுகளான ஒற்றர்களுக்கு வேண் டிய வெவ்வேறு குணங்களை விஸ்தாரமாய்ச் சொல்லியிருக்கும் கௌதில்யர், எல்லா வகையான ஒற்றர்களுக்கும் தீர்க்க புத்தியும் நல்லொழுக்கமுமிருக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார். ஏனையோர்களால் சந்தேகப்படக் கூடாத முகப் பொலிவும், எவர் எதிரிலும் கலக்கம்கொள் ளாத நெஞ்சமும், என்ன நேர்ந்தபோதிலும் இரகசியத்தை வெளியிடாத மன உறு தியும், மறைக்கப்பட்டிருக்கும் குற்றம், கள்ளங் கபடுகளைத் தெரிந்தோர் மூல மறிந்து, தெளிவாய் ஆராய்ந்து அரசர்களுக்குச் சொல்லக்கூடும் ஆற்றலும், துறவிகள் போல் இலகுவாய் உருமாறி நடமாடக்கூடிய சக்தியை ளுமே ஒற்றர்களாவதற்குத் தகுந்தவர்கள் என்பது வள்ளுவரின் கருத்து. யுள்ளவர்க
ஒரு ஒற்றன் மற்ற ஒற்றர்களைத் தெரிந்துகொள்ளாத முறையில் அரசன் நபர் களைத் தெரிந்தெடுக்க வேண்டும். ஒற்றனொருவன் கொண்டுவரும் செய்தியைத் தீர விசாரிக்காமல், அரசர்கள் நம்பக் கூடாதென்றும், ஒருவருக் கொருவர் தாக்கலில்லாமல் வேலை செய்த மூன்று ஒற்றர்கள் கொண்டுவரும் செய்தி ஒன்று போலிருந்தால் அதை நம்பலாமென்றும் கௌதில்யரும் வள்ளுவரும் சொல்லுகிறார்கள். ஒற்றர்கள் அவசியமாயிருந்தாலும் அவர்கள் கொண்டுவரும் செய்தி உண்மையில்லாவிட்டால் தீங்கு ஏற்படக் கூடுமாதலால் அவ்விதத் தீங்கு ஏற்படா வண்ணம் அரசர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இந்த உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒற்றர்களின் தொழில் மிகவும் பொறுப்பு வாய்ந்ததுமன்றி அபாயகரமாயுமிருப்பதால் இவர்களுக்கு அரசர்கள் ஏராளமான பொருளை ரகசியமாய்ப் பொது மக்கள் அறியாவண்ணம் கொடுக்கவேண்டுமென்று குறள் சொல்லுகிறது. ஒற்றர்களைப் பொது மக்கள் அறிந்து விட்டால் ரகசியச் செய்திகளைச் சேகரிக்கும் சக்தி ஒற்றர்களுக்குக் குறைந்துவிடும்.
சற்று யோசனை செய்து பார்த்தால் 'சி.ஐ. டி.' சம்பந்தமாக இந்தக் காலத் தில் நமது அரசாங்கம் அநுஷ்டித்து வரும் முறைகளைவிடப் பண்டைக்கால த்து அரசர்களின் முறைகள் உயர்ந்தவையென்று விளங்கும். முதலாவதாக ஒரு வரின் குணங்களையும் திறனையும் பரி சோதனை செய்து 'சி. ஐ. டி'க்கு எடுப்ப தாகத் தெரியவில்லை. போலீஸ் இலாகாவிலிருக்கும் உத்தியோகஸ்தர்களில் சிலர் "சி. ஐ. டி" க்குப் பொறுக்கவோ தள்ளவோபடுகிறார்கள். எடுத்தபிறகாவது அவர்களுக்கு விசேஷப் பயிறசி அளிக்கப்படுவதாயும் தெரியவில்லை. இரண்டாவ தாக சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஒழுங்காக நடந்து வருகிறார்களா என்று பார்ப்பதற்கு ரகசியக் கண்காணிப்பு முறையாக இருப்பதாகத் தெரியவில்லை. மூன்றாவதாக, எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள, ஒருவருக்கொருவரைத் தெரியாத சிலரை அனுப்பி, அவர்களுடைய செய்தி ஒத்திருந்தால்தான் உண்மையெனக் கருத கருதப்பட வேண்டுமென்ற கொள்கை, நடை முறையில் அனுஷ்டிக்கப்படுவதாயுமில்லை. கால நிலைமைக் கேற்றவாறு 'சி. ஐ. டி.' ஸ்தாபனத்தின் அமைப்பும் வேலையின் தன்மையும் மாறிக் கொண்டு வருவது இயல்பு. இருந்த போதிலும் ஒற்றர்கள் சம்பந்தமாகப் பண்டைக்கால அரசியல் ஞானிகளாகிய கௌ தில்யர், வள்ளுவர் போன்றவர்களின் அடிப்படையான கொள்கைகள் காலத்தால் பாதிக்கப்படவில்லையென்பது நிச்சயம். எந்தக் காலத்திலும், குடியரசுள்பட எவ்வித அரசாட்சிக்கும் ஒற்றர் குழாம் அவசியமானது.
தற்காலத்தில் பூத, பௌதிக, விஞ் ஞான சாஸ்திரங்கள் வளர்ச்சியடைந்திருப்பதினால், அவைகளின் உதவி கொண்டு மிகவும் பயங்கரமான குற்றங் கள் நடைபெறுகின்றன. இவ்விதக் குற்றங்கள் செய்யும் பாதகர்களைப் பற்றிப் புலனறியவேண்டிய ஒற்றர்களுக்கு விசேஷமான அறிவும் தேர்ச்சியும் வேண்டும். அமெரிக்காவில் ஒற்றர்களைப் பொறுக்கி யெடுக்கும் விஷயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஒற்றர்களுக்கென்று ஒரு பயிற்சிச் சாலை இருக்கிறது. அதில் வாலிபர்கள் பல வருஷங்களாகத் தேர்ச்சி பெறுகிறார்கள். அதற்கப்புறமும் அவர்களுடைய வீரம், தைரியம், ரகசியங்களை வைத்துக்கொள்ளும் தன்மை சோதனை செய்யப்பட்டு, சோதனையில் வெற்றியுடன் வருபவர்கள் தான் இன்டெலிஜன்ஸ் செர்விஸ்' என்ற ஒற்றர்கள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். இப்போது அரசாட்சிக்கு எதிராக சதி செய்கிறவர்களையும், சமூகத்திற்குத் தீங்கிழைத்துப் பயங்கரமான குற்றங்களைச் செய்கிறவர்களையும், ஒற்றர்கள் கவனிக்கவேண்டியதிருக்கிறது. ஒற்றர்களை அமைத்துப் பயிற்சி செய்விப்பதில் அமெரிக்காவின் முறையை மற்ற நாடுகளும் பின்பற்றலாம்.
மணிக்கொடி இதழ் -1938
செம்மையா இருக்கு ஜானி ஜி 🙏💐😄👍
பதிலளிநீக்குPdf கொடுத்தா பத்திரமா வச்சுக்குவோம் 👍🫣🫣🏃♂️🏃♂️🏃♂️
செம்மையா இருக்கு ஜானி ஜி 🙏💐😄👍
பதிலளிநீக்குPdf கொடுத்தா பத்திரமா வச்சுக்குவோம் 👍🫣🫣🏃♂️🏃♂️🏃♂️