திங்கள், 21 அக்டோபர், 2019

மணியோசை...வினாடி கதைகள்-ஜானி சின்னப்பன்



தன் ஆசை மகளுக்காக அங்குமிங்கும் தேடி நல்ல வரனாக பார்த்து திருமணம் நிச்சயித்தான் குமரன்.  திருமண செலவுக்காக ப்ரியமாக வளர்த்த ஆடுகளை  விற்று கனத்த இதயத்தோடும், பையோடும் வீடு வந்தான்.
உன் மகள் காதலனோடு கம்பி நீட்டி விட்டாள் என்ற சேதி கேட்டு இடிந்து போனான்...அருகில் அவன் கழற்றி தொங்க விட்டுப் போயிருந்த  ஆடுகளின் கழுத்து மணிகள் காற்றிலாடி ஓசையெழுப்பின..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரதாபனின் வீர சாகசம்: பகுதி 5 — பிரபஞ்ச அமைதியும் மாவீரனின் மகுடமும்..-ஜானி சின்னப்பன்

  பிரதாபனின் வீர சாகசம்: பகுதி 5 (இறுதிப் பகுதி) — பிரபஞ்ச அமைதியும் மாவீரனின் மகுடமும் பூலோகத்தின் காலச்சக்கரத்தைச் சீரமைத்த பிரதாபனின் இறு...