திங்கள், 6 ஏப்ரல், 2020

ஓடு..கொரோனா..ஓடு..


கொன்று தீர்க்கும்
கோரப் பசியை
கொண்டுதித்த 
கொரோனாவே..

கபத்தை
சுரத்தை
வெல்லும்
வரத்தை
சித்தர் முன்பே
எழுதி வைத்தார்..

அறிவும்
ஆற்றலும்
கொண்டுனை
வதைத்து
விலக்கி
கொல்வோமே..

தனித்து
விலகி
தவமே
செய்த
மூத்ததெம்
தமிழ்க்குடியே..

தனித்திருத்தல்
புதிதல்ல
புதிருமல்ல
எம்மோர்க்கு

விரட்டியடிப்போம்..
விலகியே..
வீழவைப்போம்
உன்னையே..
தொட நினைக்காதே
எம் மண்ணையே..
கொன்றொழிப்போம்
உன்னையே..

-ஜானி சின்னப்பன்

3 கருத்துகள்:

செவ்வாயின் உறங்கும் தேவதைகள் (The Sleeping Angels of Mars)_jscjohny

 வணக்கம் வாசக வாசகியரே, செவ்வாய் கிரகத்தை மையமாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை இதோ: வருடம் 2050. விண்வெளி ஆராய்ச்சியில் மனிதகுலம் ஒரு புதிய உச்சத...