வெள்ளி, 29 ஜனவரி, 2021

அடிப் பெண்ணெனும் தீயே...

 


பனிசூழ் உலகிலே 

அகத்தீயாய் நீ...

விட்டு விலகியே 

அகிலம் சமம்செய் 

அகத்தியனாய் நான்..

முத்திரை பதிக்குமொரு

மென் முத்தமிட 

நெருங்கினால்

நொறுங்கிடும்

தரணியே..

இணையாமலே

தண்டவாளமாய் 

நம் பாதைகள்..

அங்கு நீ..

இங்கு நான்..

விதியை

நொந்தவாறே

தொலைவே நின்று

துயரம் அடக்கிப்

புன்னகையைப் 

பரிசளிக்கிறேன்..

ஏற்றிடுவாய்

ஏந்திழையே..

பிழைத்துப் போகட்டும்

மானுடர்கள்..

பிரஞ்சம் நம் காதல் 

பிரிந்தாலும் இறுகிடும்

மாயம் புரியாமலே

போகட்டும்...

- ஜானி சின்னப்பன்

#கவிதையதிகாரம்

#ஜானி #jscjohny

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

The Road Graphic Novel_intro அறிமுகம் மற்றும் கதைச்சுருக்கம்..

 வணக்கம் நண்பர்களே..  இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தி...