வெள்ளி, 29 ஜனவரி, 2021

அடிப் பெண்ணெனும் தீயே...

 


பனிசூழ் உலகிலே 

அகத்தீயாய் நீ...

விட்டு விலகியே 

அகிலம் சமம்செய் 

அகத்தியனாய் நான்..

முத்திரை பதிக்குமொரு

மென் முத்தமிட 

நெருங்கினால்

நொறுங்கிடும்

தரணியே..

இணையாமலே

தண்டவாளமாய் 

நம் பாதைகள்..

அங்கு நீ..

இங்கு நான்..

விதியை

நொந்தவாறே

தொலைவே நின்று

துயரம் அடக்கிப்

புன்னகையைப் 

பரிசளிக்கிறேன்..

ஏற்றிடுவாய்

ஏந்திழையே..

பிழைத்துப் போகட்டும்

மானுடர்கள்..

பிரஞ்சம் நம் காதல் 

பிரிந்தாலும் இறுகிடும்

மாயம் புரியாமலே

போகட்டும்...

- ஜானி சின்னப்பன்

#கவிதையதிகாரம்

#ஜானி #jscjohny

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...