செவ்வாய், 18 மே, 2021

நீ வரும் பாதை_ஜானி சின்னப்பன்

 


அன்பே,
உன் காலடியோசை தொலைவில் கேட்கும்போதே இங்கே புல்பூண்டுகளும் குதூகலம் கொள்கின்றன..

உன் கொலுசின் ஓசை கேட்டு புழு  பூச்சிகளும் தலையை ஆட்டி இரசிக்கின்றன..

உன் காதில்  அசைந்தாடும்  குடை ஜிமிக்கியின் அசைவில் செடி கொடிகள் சேர்ந்தசைந்து மகிழ்கின்றன..

உன் காந்தப் பார்வையில்
புயல்மழை திரண்டு பாதையெங்கும் ஓடையாய் மாறிடுமோவென்றொரு பிரமை...

கானலாய் தொலைவில்
தெரிந்தாய்.. அடடே எப்போது 
எனைக் கடந்து
சென்று மறைந்தாய்?

உன் கொலுசொலி கடந்து போனபின் அந்தப் பாதையில் ஆயிரம்பேர் வந்தாலும் எனக்கு அது ஆளரவமற்ற சாலையே..
_ஜானி சின்னப்பன்
Pic Credit: தோழர் வீரபாண்டியன்

திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட எல்லையில் நொச்சிகுளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...