வெள்ளி, 6 மார்ச், 2020

கொரோனா..கொரோனா..


கொரோனா
கொடாத
கேளிக்கையில்லை
நிகழ்காலம்..
கொரோனா
கொண்டு வந்த
பீதியைவிட
கொரோனாவை
கொண்டாடி
மீம்ஸ் பேதி
கொண்டுவரும்
ஊடகங்களின்
ஊர்வலங்களே
தலைப்பாய்
தினம் தினம்
திண்டாட வைக்கிறது
திகைக்கும்
திடமனதில்லா
எளியோரை..
மருந்தில்லையாமே
மறைக்கிறாங்களாமே
புடிச்சி வெக்கிறாங்களாமே
முகமூடி போடணுமாமே..
நிஜத்தில்
கொரோனா
கொன்றதைவிட
கொரோனாவோ
என்கிற
பயமே
கொன்றிடும்
எதிர்காலம்..
கண்டறிவோம்
கடும்முயற்சி
கொண்டு
கொரோனாவை
வெல்லும்
வழி சீக்கிரம்...

2 கருத்துகள்:

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...