வெள்ளி, 6 மார்ச், 2020

கொரோனா..கொரோனா..


கொரோனா
கொடாத
கேளிக்கையில்லை
நிகழ்காலம்..
கொரோனா
கொண்டு வந்த
பீதியைவிட
கொரோனாவை
கொண்டாடி
மீம்ஸ் பேதி
கொண்டுவரும்
ஊடகங்களின்
ஊர்வலங்களே
தலைப்பாய்
தினம் தினம்
திண்டாட வைக்கிறது
திகைக்கும்
திடமனதில்லா
எளியோரை..
மருந்தில்லையாமே
மறைக்கிறாங்களாமே
புடிச்சி வெக்கிறாங்களாமே
முகமூடி போடணுமாமே..
நிஜத்தில்
கொரோனா
கொன்றதைவிட
கொரோனாவோ
என்கிற
பயமே
கொன்றிடும்
எதிர்காலம்..
கண்டறிவோம்
கடும்முயற்சி
கொண்டு
கொரோனாவை
வெல்லும்
வழி சீக்கிரம்...

2 கருத்துகள்:

சித்திரக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டோர் _ குறிப்புகள்...

ஜோசெட் பௌஜோட் 1922-2009 ஹெர்ஜ் ஸ்டுடியோக்களில் பல ஆண்டுகளாக தலைமை வண்ணக்கலைஞராகப் பணியாற்றிய இவர், ஜோ-எல் அசாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜோசப்...