புதன், 18 மார்ச், 2020

காத்திருப்பேன் காதலுடன்....ஜானி


கண்ணே
கடைவிழிப் பார்வை
வீசி என் இதயம்
வெடிக்க வைத்தாய்..
கண்ணீர்ப்பின்
விசையில் விழுந்து
காதலுண்டேன்..
உன் பெற்றோர்
நினைவில்வர
தப்பென்றே விலகிப் 
போனேன்..
எனையறியாமல்
நீ வீசிப்போன
புன்னகையெனும்
கடப்பாறை என்
இதயத்தை பெயர்த்தெடுக்க
உலகைமறந்து
உன்மேல் 
உன்மத்தமானேன்..
வீழ்ந்தது மனத்திரை..
வீழ்த்தியது நீ..எனை
விழுங்கட்டுமே
கல்லறை..
விழாதென்
காதல் கோட்டை..
விழிப்போடு நான்..
மீண்டும் சந்திக்கையில்
காதல் கீதத்தை
இசைத்தே தீருவேன்..
இசைவாயா?
இதயம் தடதடக்க
நீவரும் பாதை
நோக்கிக் 
காத்திருப்பேன் 
காதலுடன்...

2 கருத்துகள்:

  1. அந்த கடப்பாரையின் பெயர்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப யோசிக்குறாரே... தலைதெறிக்க ஓடும் சிம்பல் ஒரு டஜன் பார்சேல்ல்...

      நீக்கு

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...