செவ்வாய், 24 மார்ச், 2020

*கொரோனா கோரங்கள்..*


மனப்பயம் 
அகற்றவே
முகத்திரை
தேடியலையும்
மாந்தரை
முகத்திரை
இல்லையென
தவித்தலைய
திண்டாடித்திரிய
அலைக்கழித்து
மறைத்திடும்
வியாபாரக்
கள்ளர்தம்
லாபநோக்கைக்
கண்டேன்..

கோர நோயின்
பிடியிலே
ஏழை
மாந்தர்தமை
மாண்டுபோக
கைவிட்டால்
நாளை 
நமக்கும்
வரும் கேடென
உணர்வீர்..
இன்றதை
பணமாய்
மாற்றத் துடிக்கும்
அறிவிலீர்...
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...