செவ்வாய், 24 மார்ச், 2020

*கொரோனா கோரங்கள்..*


மனப்பயம் 
அகற்றவே
முகத்திரை
தேடியலையும்
மாந்தரை
முகத்திரை
இல்லையென
தவித்தலைய
திண்டாடித்திரிய
அலைக்கழித்து
மறைத்திடும்
வியாபாரக்
கள்ளர்தம்
லாபநோக்கைக்
கண்டேன்..

கோர நோயின்
பிடியிலே
ஏழை
மாந்தர்தமை
மாண்டுபோக
கைவிட்டால்
நாளை 
நமக்கும்
வரும் கேடென
உணர்வீர்..
இன்றதை
பணமாய்
மாற்றத் துடிக்கும்
அறிவிலீர்...
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்திரக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டோர் _ குறிப்புகள்...

ஜோசெட் பௌஜோட் 1922-2009 ஹெர்ஜ் ஸ்டுடியோக்களில் பல ஆண்டுகளாக தலைமை வண்ணக்கலைஞராகப் பணியாற்றிய இவர், ஜோ-எல் அசாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜோசப்...