வெள்ளி, 16 அக்டோபர், 2020

அங்கே தனிமை இருந்தது..



பிரபஞ்சத் தேடலில் 
தொலைந்தவனானேன் 
உன் கண்களின் 
பிரதிபலிப்பென் 
விழிகளில் 
பட்டுத்தெறித்ததொரு 
பிரகாச வினாடியில்... 
உன் கண்ணின் 
சக்தியில் கட்டுண்டேன்..
காணாமல் போனேன்..
இடமேது..
நான் தப்பிப்போக 
இப் பிரஞ்சவெளியில்..
உன்னில் ஐக்கியமாகிட 
ஒவ்வொரு அணுத்துகளும் 
துடிக்குதடி பெண்ணே... ஈர்ப்புவிசைக்கெதிராய் 
வேறென்ன செய்துவிட 
என்னாலியலும்..?
கரைகிறேன்..
உன்னுள் நான்..
நிறைகிறாய் 
என்னுள் நீ...
மீண்டும் அங்கே 
சலனமில்லாக்குளம் 
மாத்திரமே..
தன்னந்தனியாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...