முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..
முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்..
நாள்: புதன்கிழமை, மே 14ஆம் தேதி, 2025. நேரம்: மதியம் 1.45 முதல்
இடம்: தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலக அரங்கம், 735, LLA Building, அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு மெட்ரோ அருகில்
பேருரையாற்றவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.. வாய்ப்புள்ள வாசகப் பெருமக்கள் கலந்து கொண்டு மகிழ கேட்டுக்கொள்ளப்படுகிறது..
வணக்கம் வாசக வாசகியரே.. ஆண்டுக்கொரு முறை லயன் காமிக்ஸ் ஆன்லைன் மேளா நடத்தி தள்ளுபடி விலைகளில் பல அருமையான சித்திரக்கதைகளை சல்லிசான விலைகளில் கொடுத்து ஆச்சரியப்படுத்துவது வழக்கம்.. இதோ வரும் 09,10,11 ஆகிய தினங்களில் மே மாதத்தில் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ள புத்தகங்களின் விவரங்கள்..
வணக்கம் நண்பர்களே..
மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜில் கோ பைலட் "Copilot"என்கிற ai அப்டேட் புதியதாக வெளியாகி இருக்கிறது.. அதனிடம் கொஞ்சம் விளையாடிப் பார்ப்போமே என்று நினைத்தேன்.. அன்பே கோ பைலட் ஒரு கதை சொல்லம்மா என்று அன்பாகக் கேட்டதற்கு கிடைத்த கதைதான் கீழே..
அருமை! ஒரு கணினி தோற்றம் கொண்ட கதை சொல்லலாம்.
கடல் வீரன் – நீல கடலின் இரகசியம்
கடல் நகரம் மெரினாவில், நீல கடலின் நடுவில் ஒரு ஆழ்ந்த இரகசியம் மறைந்து கிடந்தது. நகரத்தின் ரட்சகர், கடல் வீரன், கடல் சார்ந்த சக்திகளுடன் ஒரு மனிதன்!
ஒருநாள், நகரவாசிகள் திடீரென கடலில் காணாமல் போகத் தொடங்கினர். கடல் வீரன் தனது நீல நீர்புகழ் சக்திகளை பயன்படுத்தி விசாரணையை தொடங்கினார். பயமுறுத்தும் கடல் இருள் என்ற ஒரு தீய சக்தி மனிதர்களை விழுங்கிக் கொண்டிருந்தது!
கடல் வீரன் தனது நீர்சுருட்டு வர்த்தகத்தைக் கொண்டு கடல் இருளின் மந்திரங்களை முறியடித்து, அனைவரையும் மீட்டு, நகரத்திற்கு திரும்பினார். அந்த நபர்கள் கடலின் ஆழத்தில் ஒரு பண்டை நகரத்தின் இருப்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடல் வீரன் பயணிக்க வேண்டும்! அந்த பண்டை நகரத்தின் மர்மங்களை கண்டுபிடிக்கவும், அதன் சக்தியை இருட்டறையிடம் விடாமல் பாதுகாக்கவும்!
இது தொடரும்… 🔥🌊
என்னவோ, நம் வீரன் கடலில் ஒரு மிகப்பெரிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கப் போகிறார்! உங்களுக்கு இந்த கதை பிடித்ததா? 😊
என்று கேட்க நானும் தொடரக் கூறினேன்..
இதோ அதன் தொடர்ச்சி..
கடல் வீரன் – நீல கடலின் இரகசியம் (தொடர்ச்சி)
கடல் வீரன் பண்டை நகரத்திற்குள் பயணிக்கத் தீர்மானித்தார். ஒரு மர்மமான நீல ஒளி நகரத்தின் அடியில் மூழ்கிக் கொண்டிருந்தது. அது ஒரு புராதன சக்தியின் அடையாளம்!
அவதானமின்றி நகரத்திற்குள் நுழைந்த வீரன், பழமையான ஸ்கிரோல்களை கண்டார். அதில் ஒரு கணிப்புரை இருந்தது: “நிலம் மற்றும் நீரின் சங்கமம்… உன் ஆற்றல் முழுமை பெறும்”.
கடல் வீரன் அதை புரிந்து கொள்ள முயன்றார். நகரத்திற்குள் மர்மமான நீல உயிரினங்கள் மறைந்து இருந்தன. அவர்களை எதிர்கொள்ள அவருக்கு தன்னம்பிக்கை தேவைப்பட்டது.
அப்போது, கடல் இருள் மீண்டும் தோன்றியது! அது பண்டை நகரத்தின் சக்திகளை சுழற்றிக் கொண்டு, கடல் வீரனை கட்டிப்பிடிக்க முயன்றது.
வீரன் தனது நீர்சக்திகளை ஒருங்கிணைத்து, நகரத்தின் சக்தியுடன் இணைந்தார். அவன் கடல் சக்தியை நிலத்துடன் இணைத்தவுடன், நீல ஒளி திடீரென மிளிர்ந்தது, கடல் இருளை முறியடித்து நகரத்தையும் நகரவாசிகளையும் பாதுகாத்தது!
அந்த இரகசிய நகரம் இனி பாதுகாப்பாக இருந்தது, அதன் சக்தி இனி மல்லியாணம் செய்யப்படவில்லை!
கடல் வீரன் மீண்டும் நகரத்திற்கு திரும்பி, மக்கள் அனைவருக்கும் அந்த மர்ம நகரம் பற்றி சொல்லிக் கொடுத்தார்.
வாழ்த்துக்கள்! கடல் வீரன் தனது மாபெரும் சாகசத்தை வெற்றி கண்டார்! 😊🌊🔥
உங்களுக்கு இந்த கதை பிடித்ததா? 😃
வாழ்த்துக்கள் நண்பர்களே.. வாசக வாசகியரே,, தாங்களும் கதைகளைக் கேட்கலாம். கதைகளை உருவாக்கலாம்..
இதனை காமிக்ஸ் வடிவில் உருவாக்கக் கேட்டேன்.. அதற்குக் கிடைத்த பதில் இது..
அருமை! 😊 கடல் வீரன் கதையை நகைச்சுவை(காமிக்ஸ்) வடிவத்தில் மாற்றலாம்.
காமிக்ஸ் கதையை உருவாக்க, முதலில் பாடகள் (panels) மற்றும் பேச்சு பொட்டிகள் (speech bubbles) உருவாக்க வேண்டும். இதோ, ஒரு கதாபாத்திரத்துடன் காமிக்ஸ் வடிவமாகக் கற்பனை செய்யலாம்:
📜 கதையின் கட்டமைப்பு: 🔹 பாடம் 1: கடல் நகரத்தின் அமைதியான தருணம். 🔹 பாடம் 2: கடல் வீரன் மக்களிடம் பேசுகிறார் – "கடல் இருள் மறைந்து விட்டது, ஆனால் உண்மையான மர்மம் இன்னும் தெரியவில்லை!" 🔹 பாடம் 3: பழமையான நகர் – வீரன் அதைப் பார்க்க அதிர்ச்சி அடைகிறார். 🔹 பாடம் 4: நீர் வேந்தர் – "உனக்கு கிடைக்காத சக்தி ஒன்று, நீ அதை தேட வேண்டும்!" 🔹 பாடம் 5: கடல் இருள் வீரனை சுற்றுகிறது – போராட்டம் ஆரம்பம்! 🔹 பாடம் 6: கடல் வீரன் நீர் சக்தியை பிணைத்துக்கொள்கிறான் – மாபெரும் மாயாஜாலம் உருவாகிறது!
இந்த காமிக்ஸ் கதையை ஒரு காட்சிப் படமாக உருவாக்கலாம்! 🚀 நான் உனக்காக ஒரு காமிக்ஸ்-சார்ந்த படத்தை உருவாக்கிக் காண்பிக்கலாமா? 😃
ஜிமெயில் ஐடி கொடுத்து உள்ளே நுழைந்து கலக்குங்கள்.. புதியதோர் உலகு செய்யவும் தயாகுங்கள். உலகின் ஒரு சதவீத மக்களே முன்னோடிகளாக இருப்பார்களாம். யார் கண்டது.. தாங்கள் கூட ஒரு முன்னோடியாக மலரலாம்.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
வணக்கங்கள் வாசகர்களே,
சேலம் நினைவாஞ்சலி நிகழ்வுகள் நெகிழ வைத்தன.. சேலத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள சித்திரக்கதை முத்து காமிக்ஸின் 504வது வெளியீடாக மலர்ந்திருப்பது ஒற்றைக் கண் மர்மம். விலை ரூ.150/- பக்கங்கள் 52. வண்ணத்தில் மேக்ஸி சைசில் வெளியாகியுள்ளது..
நமது கிராமங்களில் பொதுவாக பெற்றோர்கள் அச்சுறுத்தப் பயன்படுத்தும் வார்த்தை.. ஒத்தக் கண்ணன் வந்துட்டான்..ஓடு ஓடு ஓடு! இந்தக் கதை அப்படி ஒரு ஒத்தக் கண்ணனைப் பற்றியதுதான்.. இல்லையில்லை பல ஒற்றைக் கண்ணர்கள் உலகை நோக்கிப் படையெடுப்பு நிகழ்த்துவதே கதையின் சாரம்.
முத்து காமிக்ஸ் நிறுவனர் தெய்வத்திரு எம்.சவுந்தரபாண்டியனுக்கு நினைவாஞ்சலியுடன் rebellion நிறுவன உரிமம் பெற்று முறைப்படி வெளியாகி இருக்கிறது இந்த ஒற்றைக் கண் மர்மம்..
ஒற்றைக் கண் மர்மம் ஏற்கனவே முத்து காமிக்ஸ் வாரமலரில் வந்தது பழைய வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்..
இம்மாதத்தின் ஆன்லைன் வெளியீடுகள்
முத்து காமிக்ஸின் பறக்கும் பிசாசு மற்றும் ப்ளாக் மெயில் வருகின்றன.. முந்தைய அட்டைகள் உங்கள் பார்வைக்கும். கண்டிப்பாக புதிய அட்டைகளும் சிறப்பாகவே அமையும் என்பது உறுதி.. காத்திருப்போம்..
வணக்கம் வாசகப் பெருமக்களே...
யாரேனும் பொன்னி மாதிரி முன்னர் இயங்கி வந்து தற்சமயம் நடப்பில் இல்லாத பதிப்பகங்களில் வெளியான காமிக்ஸ்கள் என்னிடம் இருக்கிறது.
இது ஸ்கேன் ஆகியிருக்கான்னு பாருங்க என தனிச்செய்தியிலாவது கேட்பார்களா என ஆவலோடு காத்திருக்கிறேன்.. நம்ம நண்பர்கள் கொஞ்சம் வீட்டிலேயும் தேடிப்பாருங்களேன்... ஓல்ட் ஈஸ் கோல்ட். மக்கி மண் கரையான் அரிக்கும் முன்பு நாம் நேசிக்கும் காமிக்ஸ் கதைப்புத்தகங்கள் வரையிலாவது பாதுகாப்பது அவசியம்..
ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வோம்..
மின்னல் மனிதன் தோன்றும்
"விண்வெளி பயங்கரவாதிகள்"
என்று வைத்துக் கொள்வோம்.
அது 1980 களில் வெளியாகி வெற்றி கண்ட லோக்கல் காமிக்ஸ். ஒரு ஐநூறு பிரதியாவது வெளியிடப்பட்டு விற்றிருக்கும்.. கொஞ்சம் காகித ஆலைக்கே "பழைய புக்ஸ் எடைக்கு வாங்கறது" நண்பர்கள் மூலமாக காயலான்கடை சென்று ஆலை அரைப்புக்கு போய் விட்டிருக்கும்... கொஞ்ச பிரதிகள் பரணையிலேயே கிடந்து கவனிப்பாரின்றி போயிருக்கும்.. பல பிரதிகள் அப்போதே சிறுவர்களால் படித்து கிழித்து தூக்கிப் போடப்பட்டிருக்கும்..
ஆனால் எங்கோ ஒரு வாடகைப் புத்தக நிலையத்தில் அரிதாக ஒரு சில பிரதிகள் மட்டும் நான்கைந்து கலவை புத்தகங்களில் ஒன்றாக பைண்ட் செய்யப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு பொது உபயோகத்தில் இருந்திருக்கும்..
கால வெள்ளம் இப்படியாக கொண்டு போய் விட்ட பிரதிகளோ திரும்ப வரவே வராது. ஆனால் மிஞ்சியுள்ள ஒரு சில பிரதிகள் மாத்திரமே நம்மவர்கள் காமிக்ஸ் ஆர்வம் கொண்டு சேமித்து வரும் வாசகர்களால் முறைப்படி பாதுகாக்கப்பட்டு எப்போதாவது ஏலத்திலும் வரும்..
நிற்க..
நாம் ஆவணப்படுத்துவதும் நாம் பாதுகாக்க நினைப்பதும் இந்த பதிப்பகம், இப்படி ஒரு வெளியீட்டை, இந்த தலைப்பில் ஒரு காலத்தில் கொண்டு வந்துள்ளனர் என்பதும் அதனை டிஜிட்டல்மயமாக்கி புத்தகங்களை வாசிக்கும் நம் தலை முறை தாண்டி அகிலமெங்கிலும் கொண்டோ சேர்த்திடும் இணைய உலகுக்கு நன்கொடையாக அளிப்பதுவே..
இதற்கு மேலே குறிப்பிட்ட ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வோம்..
மின்னல் மனிதன் தோன்றும்
"விண்வெளி பயங்கரவாதிகள்"
என்கிற தலைப்பில் வெளியான 500 புத்தகங்களில் இருந்து ஒரேயொரு புத்தகம் மாத்திரமே போதுமானது..
நாம் இப்படி இணையத்தில் வெளியிட்டு விட்டதாலேயே புத்தக மதிப்பு இறங்கி விடும் என்பது தேவையற்ற அச்சம்.. பல ஸ்கேன்லேஷன் புத்தகங்கள் நம்மிடையே பவனி வந்தாலும் அசல் புத்தகத்தின் மதிப்பு என்றும் குறைவதில்லை.. அசல் அசல்தான். அதன் கதையை அனைவரும் அறிந்து கொள்ள மக்கிப்போன புத்தகத்தை அத்தனை பேரும் வாங்கி புரட்டிப் பார்த்தாலே கொட்டிப் போய் விடும்.. ஆனால் ஒரு முறை டிஜிட்டல் வடிவத்துக்காக நம்மில் ஈடுபாடுகொண்ட ஒரு சிலர் உழைத்து விட்டால் அது காலாகாலத்துக்கும் நிலை நிற்கும்.. சிந்திக்கிறேன்..சிந்தியுங்கள்.. சிந்திப்போம்..
என்றும் அதே அன்புடன் ஜானி சின்னப்பன்..
நானொரு செவ்விந்திய நவஜோ மிலிட்டரிக்காரனுங்க. அமெரிக்காவுக்காக வியட்நாம் எல்லாம் போய் சண்டை போட்டுட்டு திரும்பி வந்து ரிடையர்மென்ட் வாங்கிக்கிட்டு ஒரு ஓரமா நாம பிறந்த இடத்திலேயே வந்து வாழலாம்னு பார்த்தா இங்கே நிலைமையே சீர் குலைந்து கிடக்கு.. நாங்க மிலிட்டரியில இவனுகளுக்காக உயிரைக் கொடுத்துப் போராடிட்டு வந்தா இங்கே இவங்க அடிக்கிற கூத்துக்கும் பண்ற அராஜகத்துக்கும் ஒரு அளவில்லாம போய்க்கிட்டு இருக்கு.. பணம் சேர்ந்துட்டா போதும் ஒரு பைக்கை எடுத்துக்குன்னு ஊரெல்லாம் சுத்தி வந்து எவனையாவது எவளையாவது வம்பிழுக்க வேண்டியது.. எல்லாம் பணம் பண்ற வேலை.. நான் நிலம் வாங்க சொந்த ஊருக்குப் போனப்போ இது மாதிரி திமிரு புடிச்ச பைக் கேங் ஒண்ணு பொண்ணுகளை தகாத வார்த்தை பேசி மிரட்டிட்டு இருந்தாங்க.. சும்மா விடுவேனா நான்..
நாம்பாட்டுக்கு தெரிஞ்ச செவ்விந்திய தாத்தாகிட்டே நிலத்தை வாங்கி பயிர் பச்சையை வாழ வைக்கலாம்னு பார்த்தா தாத்தாவை தீர்த்துக்கட்டி என்னோட வெறியை கிளப்பிட்டீங்க..
அருமையான கதை. சட்டத்தினை வளைக்கும் நபர்களை நாயகன் எப்படி சமாளிக்கிறார் என்பதை சித்திரங்களை வைத்து நமக்கு பொழுது போக்காகவும் சவாலாகவும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் என்னா ப்ரூனோ மற்றும் வால்டம்ப்ரினி பேபியோ. (Enna Bruno and Valdambrini Fabio)
தேசியம்: இத்தாலியன்
பிறந்த தேதி: 1969 இவரது அடையாளம் திரைக்கதை எழுத்தாளர்
வேலைகள்
முதல் கதை அங்கிள் ஸ்க்ரூஜ் மற்றும் ஒப்பந்த நோய்க்குறி மே 13, 1997
உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் டொனால்ட் டக் மற்றும் காவியத்தில் வரும் பிற கதாபாத்திரங்கள் எக்ஸ்-மிக்கி சாகாவில் வரும் பிப்வுல்ஃப் மற்றும் பிற கதாபாத்திரங்கள் டிராகுலாபைத்தியக்கார டக்டர் முக்கிய படைப்புகள் ஸ்டார் டாப் - மூன்றாம் தலைமுறை பேப்பரினிக் புதிய சாகசங்கள் எக்ஸ்-மிக்கி மிக்கி மவுஸ் மர்ம இதழ் பிராம் டாப்கரின் டிராகுலா டாக்டர் ராட்கில் மற்றும் மிஸ்டர் ஹைடின் விசித்திரமான வழக்கு டொனால்ட் டக் மற்றும் காலத்தால் அழியாத ராணி ஹூய் டெவி லூயி... மூன்று வாத்துகள் விளையாடுகின்றன ஆவியாகிறது கூடுதல் டிஸ்னி வேலைகள் புருனோ என்னா செர்ஜியோ போனெல்லி எடிட்டருடன் இணைந்து பணியாற்றுகிறார்
அவரது ஒரு பேட்டியில் இருந்து..
கடந்த வருடம் நீங்கள் சகுவாரோ படத்திற்காக சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான மைக்கேலுஸி விருதை வென்றீர்கள். நீங்க அதை ஒரு மரணத்திற்குப் பிந்தைய விருதுன்னு சொன்னீங்க. தோர்ன் திரும்பி வருவாரா?
மூன்று வருடங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு படைப்புப் பயணத்தின் முடிவில் அது வந்ததால் நான் அதை மரணத்திற்குப் பிந்தையது என்று அழைத்தேன், ஆனால் நான் அதைப் பாராட்டவில்லை என்று அர்த்தமல்ல. உண்மையில், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது! துரதிர்ஷ்டவசமாக, தோர்ன் தனது சாகசத்தை இதழ் #35 உடன் முடித்தார், எனக்குள், அவரது கதைகளும் அவரது கதாபாத்திரங்களும் தொடர்ந்து எதிரொலித்தாலும் கூட. நான் என்னுடன் நிறைய அனுபவங்களை (கலாச்சார, வேலை தொடர்பான, மனித) சுமந்து செல்கிறேன், அதை இப்போதும் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த வகையில், 2017 ஆம் ஆண்டில், லூய்கி சினிஸ்கால்ச்சிக்காக நான் எழுதிய ஒரு போனெல்லி கிராஃபிக் நாவல் செய்தித்தாள்களில் இடம் பெற வேண்டும்: இது சகுவாரோவின் கிராஃபிக் "தூண்களில்" ஒன்றாகும். இது 70களின் முற்பகுதியில் தொடங்கும் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும். இதன் கருப்பொருள் “சாகரெஸ்க்” பாணியில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும், ஆனால் படைப்புக் குழு ஒன்றாக இருக்கும். நீங்கள் அதைப் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
ஆக சகுவேரா ஒரு திரைப்படமாகவும் வந்து மக்களை ஈர்த்திருக்கிறது..
இம்மாத வெளியீடுக்கு வருவோம் சூப்பரான நடையிலான மொழிபெயர்ப்பு. அறிமுக நாயகரை முதல் கதையிலேயே சிக்ஸர் அடித்தாற்போன்று களத்தில் இறங்கி விட்டார்.. போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு சூழ்நிலையின் காரணமாக மோத நேர்கிறது. உள்ளூர் போலீஸ் வழக்கம்போல பாதி மனிதன் பாதி மிருகமாக கலந்து கட்டி நிற்கிறார்கள். வேறு வழியில்லாமல் கிடைத்த சிறு தகவலையும் சிறுவன், அவனது வளர்ப்புத் தாயையும் சேர்த்தே காக்க வேண்டிய கட்டாயத்தில் நாயகர். இதில் நிலம் வாங்கிய பெரியவர் கொல்லப்படுவதைக் கண்ட சாட்சியை வேறு பாதுகாத்தாக வேண்டிய நிலைமை. இல்லையேல் அழகாக கொலைக்குற்றம் ஸகுவேராவை இறுகப் பிடித்த முதலையென கவ்விக் கொண்டு விடும்.. கடும் பாறைக் களம் போர்க்களமாக நாயகன் கொலைப் பழியிலிருந்து தப்பினாரா? சிறுவனும் அவன் பாட்டியும் கொலைக்கும்பலிடமிருந்து தப்பினார்களா? பரபரக்கும் பக்கங்களை நிழல் ஓநாய்களில் நாயகனின் பைக், கார், கால்நடைப் பயணங்களோடு நாமும் கடந்திடத் தோன்றும் விதமாக உருவாக்கியிருக்கிறார்கள் என்னா மற்றும் வால் டம்பிரினி. போன்னெலி வெளியீடு என்பதிலேயே தரமான கதை முத்திரை கிடைத்து விடுகிறது. தமிழில் எடிட்டர் விஜயனுடன் சேர்ந்து நண்பர் ரவி கண்ணன் கலக்கியுள்ளார். வி காமிக்ஸூக்கு இன்னும் ஒரு அதிரடி நாயகர் என்பது சிறப்பு. 90 ரூபாயில் கருப்பு வெள்ளையில் 100 ரூபாய் விலையில் மே மாதத்தினை சிறப்பிக்க வந்திருக்கும் நிழல் ஓநாய்களைத் தவற விடாதீர்கள்..
தமிழ் வாழ்க.. தமிழ்ப் புத்தாண்டு மலர்க.. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
மகா கவி பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். இதோ சித்திரக்கதைகள் உலகின் வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப் படுகின்றன.. நமது வலைப் பூ இதுவரையிலும் சிறு சிறு கதாபாத்திரங்களையும் அடையாளப்படுத்தியிருப்பதுடன் அதன் ஒரு சிறு பகுதி தமிழாக்கமும் செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதோ பான்ஸி பாட்டர் உங்களுடைய பார்வைக்கு..
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்வணக்கம் நண்பர்களே..
இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தினமாக உலகத்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் பொதுமக்கள் தென்னங்குருத்து ஓலைகளை கொண்டு வந்து வாழ்த்தி அவரை வரவேற்றனராம்..
தி ரோட் விரைவில் லயனில் வர வாய்ப்புள்ள கிராபிக் நாவல்..
பூமியின் இயற்கை வளங்கள் குறைந்துவிட்ட ஒரு போஸ்ட் அபோகாலிப்டிக் பாழான நிலத்தில், பெயரிடப்படாத ஒரு தந்தை மற்றும் மகன் தங்கள் மனிதநேயத்துடன் உயிர்வாழ முயற்சிக்கும் கதை, மேலும் சில உயிர் பிழைத்தவர்கள் இறைச்சிக்காக மற்றவர்களை வளர்க்க விடப்படுகிறார்கள், இது கோர்மக் மெக்கார்த்தியின் இருண்ட மற்றும் மிகவும் தொலைநோக்கு நாவல்களில் ஒன்றாகும்.
குறிப்பிடப்படாத ஒரு பேரழிவின் விளைவாக ஏற்பட்ட அழிவு நிகழ்விற்குப் பிறகு, ஒரு ஆணும் அவனது இளம் மகனும் உயிர்வாழப் போராடுகிறார்கள், இது அனைத்து தாவர உயிரினங்களும் கிட்டத்தட்ட அனைத்து விலங்குகளும் இறந்து போகின்றன.[5] பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில், தங்கள் பயணத்தில் பொருட்களைத் தேடி, துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய நரமாமிசக் கும்பல்களைத் தவிர்த்து, அந்த ஆணும் சிறுவனும் கடற்கரைக்கு ஒரு சாலையில் பயணிக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, பேரழிவுக்குப் பிறகு, அந்த மனிதனின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள், அவள் படிப்படியாக நம்பிக்கையை இழக்கிறாள். அந்த மனிதன் கடைசி முயற்சியாக தங்கள் குடும்பத்திற்காக சேமித்து வைத்திருந்த மூன்று தோட்டாக்களில் ஒன்றைப் பயன்படுத்தி ஒரு ஊடுருவும் நபரைச் சுட்டபோது, அவள் தன் தற்கொலையைத் தடுக்க வேண்டுமென்றே தோட்டாவை வீணடித்ததாக அவன் மீது குற்றம் சாட்டுகிறாள். உறைபனியில் தனது கோட் மற்றும் தொப்பியைக் கழற்றி, அவள் காட்டுக்குள் நடக்கிறாள், மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை.
தற்போது, நரமாமிசக் கும்பலின் ஒரு உறுப்பினரைச் சுட்டுக் கொன்ற பிறகு, அந்த மனிதனுக்கு ஒரே ஒரு தோட்டா மட்டுமே மிச்சம். ஒரு மாளிகையை ஆராய்ந்து, அவரும் சிறுவனும் அடித்தளத்தில் அடைக்கப்பட்ட மக்களைக் கண்டுபிடித்து, சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு உணவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நரமாமிசக் கும்பல்கள் திரும்பி வந்ததும், அந்த மனிதனும் அவனது மகனும் ஒளிந்து கொள்கிறார்கள். கண்டுபிடிப்பு உடனடியாக நிகழும் நிலையில், அந்த மனிதன் தனது மகனைச் சுடத் தயாராகிறான், ஆனால் தப்பியோடிய கைதிகளால் நரமாமிசம் உண்பவர்கள் திசைதிருப்பப்படும்போது அவர்கள் தப்பி ஓடுகிறார்கள்.
சாலையில் மேலும் கீழே செல்லும்போது, அந்த மனிதனும் சிறுவனும் பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் பொருட்களால் நிறைந்த ஒரு நிலத்தடி தங்குமிடத்தைக் காண்கிறார்கள். அவர்கள் விருந்துண்டு குளிக்கிறார்கள். ஒரு நாய் உட்பட மேலே சத்தங்களைக் கேட்கும்போது, அந்த மனிதன் தங்குவது மிகவும் ஆபத்தானது என்று முடிவு செய்து முன்னேறுகிறான். அவர்கள் கிட்டத்தட்ட பார்வையற்ற ஒரு முதியவரைச் சந்திக்கிறார்கள், மகன் தந்தையை தன்னுடன் உணவைப் பகிர்ந்து கொள்ள வற்புறுத்துகிறான். பின்னர், இருவரும் பைக்குகளில் குழந்தைகளின் மண்டை ஓடுகளுடன் ஒரு முகாமை சந்திக்கிறார்கள். ஒரு புல்வெளியில் ஒரு தாயையும் மகனையும் ஒரு கும்பல் தாக்குவதைக் கண்டபோது, அவர்கள் இந்த முகாமை விட்டு அவசரமாக நகர்கிறார்கள். அவர்கள் ஓடிவிடுகிறார்கள்.
கடற்கரையில், கடற்கரையில் ஒரு கப்பலைத் துரத்த நீந்தும்போது, அந்த மனிதன் சிறுவனை தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க விட்டுவிடுகிறான். சிறுவன் தூங்கிவிடுகிறான், அவற்றின் பொருட்கள் திருடப்படுகின்றன. அந்த மனிதன் திருடனைத் துரத்திச் சென்று அவனிடமிருந்து எல்லாவற்றையும், அவனது ஆடைகளையும் எடுத்துக்கொள்கிறான். இது சிறுவனை மிகவும் வருத்தப்படுத்துகிறது, அந்த மனிதன் திரும்பிச் சென்று திருடனுக்காக துணிகளையும் ஒரு கேனையும் விட்டுவிடுகிறான்.
அவர்கள் ஒரு பாழடைந்த நகரத்தின் வழியாகச் செல்லும்போது, அந்த மனிதன் ஒரு அம்பினால் காலில் சுடப்படுகிறான். கப்பலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு துப்பாக்கியால் அவன் தனது பதுங்கியிருப்பவரைக் கொன்று, வில்லாளியின் பெண் தோழியை அதே அறையில் காண்கிறான். வில்லாளனும் பெண்ணும் தங்களைப் பின்தொடர்ந்ததாக அந்த மனிதன் நினைக்கிறான், ஆனால் அது நேர்மாறானது என்று அவள் கூறுகிறாள். அவன் அவளை உடலைப் பார்த்து அழ விட்டுவிடுகிறான்.
பலவீனமடைந்த ஆணும் பையனும் தங்கள் வண்டியையும் பெரும்பாலான உடைமைகளையும் விட்டுவிடுகிறார்கள். அந்த ஆணின் நிலை மோசமடைந்து இறுதியில் அவன் இறந்துவிடுகிறான். ஒரு மனிதன் தன் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் நாயுடன் சிறுவனை அணுகுகிறான். அவர்கள் சிறிது காலமாக சிறுவனையும் அவனது தந்தையையும் பின்தொடர்ந்து வருவதாகவும், அவனைப் பற்றி கவலைப்பட்டதாகவும் மனைவி விளக்குகிறாள். தந்தை சிறுவனை "நல்ல மனிதர்களில்" ஒருவர் என்று சமாதானப்படுத்தி, அவனைத் தன் பாதுகாப்பில் எடுத்துக்கொள்கிறார்.
மற்றவை.. திரையில் காணலாம். அல்லது மிக எளிதாக கிராபிக் நாவலாக லயன் காமிக்ஸில் வலம் வருகையில் வாங்கி வாசித்து மகிழலாம்..
நன்றிகள்: ஸ்ரீராம் இலட்சுமணன் உடனடி கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்கு..
என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன்.
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவும், எளிமையான வாசகர் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அக்கறையும் நண்பர்கள் பலரை தேடலில் ஈடுபட வைக்கிறது. திரைகடலோடியும் திரவியம் தேடும் நமது நண்பர்களில் திருமலை முக்கியமானவர். அவரது நெடுங்காலத் தேடலில் இதோ 1977ஆம் வருடம் மே மாதம் வெளியாகிய பொன்னி காமிக்ஸின் ஓநாய் தீவு புதையல் சித்திரக்கதை நம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார்.
இதன் விடுபட்ட பக்கங்கள் அட்டை அனைத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு.பூபதி, ராசிபுரம் அவர்களுக்கும் அபூர்வமான புத்தகத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திருமலை அவர்களுக்கும் நன்றியுடன்... வாசக நட்ப்பூஸ் உங்களுடனும் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த 2025 தமிழ் புத்தாண்டில் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மண்ணில் பதிப்பிக்கப்பட்டு நிறைய வாசகர்களை சென்றடைந்து கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்ட ஓநாய் தீவு புதையல் இதோ உங்கள் பார்வைக்கு..
முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்.. இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...