திங்கள், 17 பிப்ரவரி, 2020

வதைக்காதே..வா..

இமை மூடியபொழுதினில் உன்நினைவென்னை வதைக்குதடி..
தென்றலாய் வந்து தீண்டிப் போனாய்..
தீயாய் தகிக்குதென் நெஞ்சமடி...
அலையாய் வந்து நனைத்துப் போனாய்..
வெந்நீரில் மீனாய் வதைக்குதென் இதயமடி...
கதிர்வீச்சாய் உன் கண்கள் ஒளிவீச
என் நெஞ்சில் பாய்ந்ததே ஓர்
 ஈட்டியடி..
மீண்டும் வருவாய்..
நகைத்தென்னைக் கொல்வாய்..
தயாராய் காத்திருக்கிறேன்..
வா...
....
தூண்டில் மின்னிதழுக்காக..
ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்திரக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டோர் _ குறிப்புகள்...

ஜோசெட் பௌஜோட் 1922-2009 ஹெர்ஜ் ஸ்டுடியோக்களில் பல ஆண்டுகளாக தலைமை வண்ணக்கலைஞராகப் பணியாற்றிய இவர், ஜோ-எல் அசாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜோசப்...