சனி, 29 பிப்ரவரி, 2020

முகவரி...ஜானி

*முகவரி..*
நிலையற்று
நிம்மதியின்றி
தொந்தரவுகளை
தினசரி தாங்கி
ஆணிக்கும்
அஞ்சி
தண்ணீரை
தாராளமின்றி
தயக்கத்தோடு
கோரி
காமிராவாய்
உற்று நோக்கும்
விழிகளாய்
விரட்டித்திரிவது
கண்டும் 
காணாமலும்
திறந்திடும்
குழாயையும்
ஓசையின்றி
திறந்து
வீடுவாசல்
பெருக்க
சுணக்கம்
காட்டவும்
பயந்து
வீட்டு ஓனர்
எனும்
இடிஅமீன்களிடம்
அவஸ்தையனுபவித்து
வாடகை வாழ்
குடிகள்
அத்தனையும்
படும்பாடெதற்கு?!
நாலு காசை
சேர்த்து 
தனக்குரிய
முகவரியை
கண்டடையத்தானே..

-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...